பல மின் உற்பத்தி நிலையங்களில் டீசல் இல்லை: இன்று 4.30 முதல் 10.30 வரை மின்வெட்டு
Tue, 22 Feb 2022 13:02:30 +0530
நாடு பூராகவும் இன்றும் மின் வெட்டு இடம்பெறும் என்று பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று பல மின் உற்பத்தி நிலையங்களில் டீசல் தீர்ந்துள்ளது.இதனால்,பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 10.30 மணிவரை நாடு பூராகவும் சுழட்சி முறையில் மின்வெட்டு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மற்றும் மூன்று மணிநேர அடிப்படையில் இந்த மின்வெட்டு இடம்பெறும்.
அதன்படி ,A -வலயத்தில் பிற்பகல் 4.30 மணி முதல் 6.30 மணி வரையும்,B-வலயத்தில் 6.30 முதல் 8.30 வரையும் C -வலயத்தில் 8.30 முதல் 10.30வரையும் இரண்டு மணி நேர மின்வெட்டு இடம்பெறும்.
மேலும்,P ,Q ,R ,Sவலயத்தில் 4.30 முதல் 7.30 வரையும் T, U,V ,W வலயத்தில் 7.30 முதல் 10.30 வரையும் மூன்று மணிநேர மின்வெட்டு இடம்பெறும்.